முகப்பு
செய்திகள்

இந்தியாவில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது.

Updated On : 29 ஜூலை 2024, 9:36 pm IST
- படம் | பிசிசிஐ
பகிர்:

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக நடத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடத்தப்படவுள்ள இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20 வடிவில் நடத்தப்படவுள்ளது.

அதேபோல, வருகிற 2027 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடத்தப்பட உள்ளது. வங்கதேசத்தில் நடத்தப்பட உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 50 ஓவர் வடிவில் நடத்தப்பட உள்ளது. அதே ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் 50 ஓவர் உலகக் கோப்பையும் நடைபெறவுள்ளது.

Advertisement

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அணி போன்றவை பங்கேற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மிகப் பெரிய ஐசிசி தொடர்களுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும் களமாக ஆசிய அணிகளால் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.