செய்திகள்

பாரா தடகள சாம்பியன்ஷிப்: 2 தங்கம் வென்ற செளரப் சர்மா!

ஹிமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த வீரர் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

DIN

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஹிமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த வீரர் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

ஸ்விட்சர்லாந்து நாட்டின் நோட்வில் பகுதியில் பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஜூன் 6ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி ஜூன் 9ஆம் தேதி (இன்றுடன்) முடிகிறது.

இப்போட்டியில், ஹிமாசலப் பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டம் ரூபா காயா பகுதியைச் சேர்ந்தவர் செளரப் சர்மா இப்போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

155 மீட்டர் மற்றும் 5000 மீட்டர் என இரு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கத்தைத் தட்டிச்சென்றார்.

சிறு வயது முதலே விளையாட்டின்மீது ஆர்வம் கொண்ட சர்மா, தேசிய அளவில் 7 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

சிறு வயது முதலே விளையாட்டின் மீது ஆர்வமுடன் இருந்த செளரப் சர்மாவின், நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளதாகவும், இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற லட்சியத்தை அடைந்துள்ளதாகவும், அவரின் சகோதரர் விகாஸ் சர்மா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உணவு மானிய எண்ம நாணய சேவை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்: மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி

யாருடன் கூட்டணி என நாளை அறிவிப்பு: பாமக நிறுவனா் ச.ராமதாஸ்!

முத்தாயம்மாள் கல்லூரியில் 926 மாணவா்களுக்கு மடிக்கணினி

மாயமான முதியவரின் உடல் முத்துமலை முருகன் கோயில் அருகே கண்டெடுப்பு

இளைஞா்கள் தாக்கியதில் காயமடைந்தவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT