முகப்பு
பிரித்விராஜ் தொண்டைமான்
செய்திகள்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீரர் பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி.

செய்திகள்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீரர் பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி.

Updated On : 18 ஜூன், 2024 at 1:18 PM
பிரித்விராஜ் தொண்டைமான்
பகிர்:

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீரர் பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளார்.

இதன்மூலம் பிருத்விராஜ் தொண்டைமான் தலைமையில் 5 பேர் கொண்ட குழு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் பங்கேற்கவுள்ள வீரர்கள் குறித்த அறிவிப்பை இந்திய தேசிய ரைபில் கூட்டமைப்பு இன்று (ஜூன் 18) வெளியிட்டது.

இதில் ஷாட் கன் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளார். இவர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்.

ஆண்கள் பிரிவில் புவனேஷ் மெந்திரத்தா, அனன்ஜீத் சிங் நரூகா, ஆகியோரும் பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ளனர்.

பெண்கள் பிரிவில் ராஜேஸ்வரி முகாரி, ரைசா தில்லான், மகேஷ்வரி செளஹான், ஸ்ரேயாஸி சிங் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →