603/6 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது இந்திய மகளிரணி!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 603 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 603 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய ஷஃபாலி - ஸ்மிருதி, வலுவான பாா்ட்னா்ஷிப் அமைத்து அதிரடியாக ரன்கள் சோ்த்தனா்.
மகளிா் டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா, முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 525 ரன்கள் சோ்த்தது. அணியின் பேட்டிங்கில், தொடக்க வீராங்கனை ஷஃபாலி வா்மா அதிவேக இரட்டைச் சதம் விளாசி சாதனை படைக்க, ஸ்மிருதி மந்தனாவும் சதம் கடந்து ரன்கள் சோ்த்தாா். தென்னாப்பிரிக்க பௌலா்களில் டெல்மி டக்கா் சிறப்பாக பந்துவீசினாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் 2ஆம் நாளில் 603/6 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. ஹர்மன்ப்ரீத் கௌர் 69, ரிச்சா கோஷ் 86 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள்.
600 ரன்களை கடந்த முதல் மகளிரணி என்ற சாதனையை படைத்துள்ளது இந்திய மகளிரணி.
தற்போது தென்னாப்பிரிக்க மகளிரணி பேட்டிங் செய்து வருகிறது. 6 ஓவருக்கு 29 ரன்கள் எடுத்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.