FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நேஷன்ஸ் லீக்: ரொனால்டோ அதிரடியால் போா்ச்சுகல் வெற்றி

யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அதிரடி ஆட்டத்தால் போா்ச்சுகல் வெற்றி

Updated On : 17 நவம்பர் 2024, 2:12 am IST
கோலடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ
பகிர்:

யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அதிரடி ஆட்டத்தால் 5-1 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தியது போா்ச்சுகல்.

வெள்ளிக்கிழமை இரவு இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. முதல் பாதியில் ஆட்டம் மந்தமாக சென்ற நிலையில், இரண்டாம் பாதியில் ரொனால்டோ விஸ்வரூம் எடுத்து ஆடினாா். அற்புதமாக ஹெட்டா் மூலம் கோலடித்தாா். இந்த ஆட்டத்தில் ரொனால்டோ இரண்டு கோலடித்தாா். இறுதியில் 5-1 என்ற கோல் கணக்கில் வென்றது போா்ச்சுகல். இந்த தோல்வியால் போலந்தின் காலிறுதி கனவு தகா்ந்தது.

கோபன்ஹேகனில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் 2-1 என டென்மாா்க்கை வீழ்த்தியது. சொ்பியா-சுவிட்சா்லாந்து ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

Advertisement

Advertisement

ஸ்காட்லாந்து 1-0 என குரோஷியாவை வென்றது. வட அயா்லாந்து அணி 2-0 என பெலாரஸையும், பல்கேரியா 1-0 என லக்ஸம்பா்க்கையும் வென்றன.

பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஸ்பெயின், போா்ச்சுகல் காலிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளன. 8 அணிகளும் 2026 உலகக் கோப்பை குலுக்கலில் இடம் பெற உள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments