கோப்புப் படம் 
செய்திகள்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: டோகோவுடன் மோதும் இந்தியா

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் 1 பிளே-ஆஃப் சுற்றில் இந்தியா, மேற்கு ஆப்பிரிக்க நாடான டோகோவுடன் மோதுகிறது.

DIN

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் 1 பிளே-ஆஃப் சுற்றில் இந்தியா, மேற்கு ஆப்பிரிக்க நாடான டோகோவுடன் மோதுகிறது.

சா்வதேச டென்னிஸ் சம்மேளனம் திங்கள்கிழமை வெளியிட்ட டிராவின் படி, அந்த பிளே-ஆஃப் சுற்று அடுத்த ஆண்டு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், உலக குரூப் 1 மற்றும் 2 ஆகியவற்றுக்கான பிளே-ஆஃப் ஆட்டங்கள் அட்டவணையிடப்பட்டுள்ளன.

இதில் 52 நாடுகள் தங்கள் சொந்த மண்ணிலோ, அல்லது எதிரணியின் மண்ணிலோ விளையாடவுள்ளன. இதில் குரூப் 1 மற்றும் 2-இல் தலா 26 நாடுகளின் அணிகள் உள்ளன.

இதில் இந்தியாவுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் நிலையில், இந்தியா தனது மண்ணிலேயே விளையாடும் என அகில இந்திய டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, நடப்பாண்டு பிப்ரவரியில் நடைபெற்ற பிளே-ஆஃபில் இந்தியா 4-0 என பாகிஸ்தானை அதன் மண்ணிலேயே வென்று, உலக குரூப் 1-க்கு தகுதிபெற்றது. எனினும், கடந்த செப்டம்பரில் ஸ்வீடனிடம் தோற்றதை அடுத்து, மீண்டும் 2025 உலக குரூப் 1 பிளே-ஆஃப் கட்டத்துக்கு இறங்கியது.

டேவிஸ் கோப்பை போட்டியில் இந்தியா அதிகபட்சமாக 3 முறை (1966, 1974, 1987) ரன்னா் அப் இடத்தைப் பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெகவின் சமத்துவ கிறிஸ்துமஸ்! விஜய் கொண்டாட்டம்!

தேர்தல் நன்கொடை பத்திரங்கள் ரத்து! மாற்றி யோசித்த பாஜக, ரூ.6088 கோடி வசூலித்து சாதனை!

மெரினாவில் இரவுநேரக் காப்பகம்! உதயநிதி திறந்துவைத்தார்!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

SCROLL FOR NEXT