FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

போலந்து நாட்டிற்காக வரலாறு படைத்த இகா ஸ்வியாடெக்..! 6 முறையும் பாலினி தோல்வி!

வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய இகா ஸ்வியாடெக் குறித்து...

Updated On : 19 ஆகஸ்ட் 2025, 6:28 pm IST
கோப்பையுடன் இகா ஸ்வியாடெக்... - படம்: எக்ஸ் / சின்சினாட்டி ஓபன்.
பகிர்:

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் மகளிர் இறுதிப் போட்டியில் இகா ஸ்வியாடெக் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளார்.

சின்சினாட்டியில் முதல்முறையாக ஓபன் பிரிவில் போலந்து வீரர் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஆயிரம் புள்ளிகள் கொண்ட சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 9-ஆம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினியும் மோதினார்கள்.

Advertisement

Advertisement

ஒரு மணி நேரம் 49 நிமிஷங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் இகா ஸ்வியாடெக் 7-5, 6-4 என நேர் செட்களில் பாலினியை வீழ்த்தினார்.

ஜாஸ்மின் பாலினி - படம்: எக்ஸ் / ஜாஸ்மின் பாலினி

இருவரும் இதுவரை 6 முறை மோதியிருக்க, அனைத்திலுமே ஸ்வியாடெக் வென்று ஆதிக்கம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலமாக தனது முதல் சின்சினாட்டி கோப்பையை வென்றுள்ளார்.

இதை வெல்லும் முதல் போலந்து வீராங்கனை என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

இந்தப் பதக்கம் அவரது கரியரின் 24-ஆவது பட்டமாகும். 1000 புள்ளிகள் கொண்ட டபிள்யூடிஏவில் இது 11-ஆவது கோப்பை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு ஸ்வியாடெக் முன்னேறியுள்ளார்.

summary

Ika Swiatek made history by winning the Cincinnati Open Tennis Women's Finals trophy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments