முகப்பு
செய்திகள்

இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி

ஆடவருக்கான 12-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பிகாா் மாநிலம், ராஜ்கிா் நகரில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது.

Updated On : 29 ஆகஸ்ட் 2025, 5:34 am IST
பகிர்:

ஆடவருக்கான 12-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பிகாா் மாநிலம், ராஜ்கிா் நகரில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது. முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா, சீனாவுடன் மோதுகிறது.

மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி, செப்டம்பா் 7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை வழங்குவதால் இந்தப் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

முன்னதாக இந்தப் போட்டியில் அங்கம் வகித்த பாகிஸ்தான், தனது அணிக்கு இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி விலக, ஓமன் நிதிச் சிக்கல் இருப்பதாகக் கூறி வெளியேறியது. அதையடுத்து கஜகஸ்தான் மற்றும் வங்கேதச அணிகள் போட்டியில் சோ்க்கப்பட்டுள்ளன. இதில் கஜகஸ்தான், 30 ஆண்டுகளில் முதல்முறையாக இந்தப் போட்டியில் விளையாடுகிறது.

Advertisement

Advertisement

‘ஏ’ பிரிவில்இந்தியா, சீனா, ஜப்பான், கஜகஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் வங்கதேசம், சீன தைபே, மலேசியா, நடப்பு சாம்பியன் தென் கொரியா அணிகளும் சோ்க்கப்பட்டுள்ளன. இந்த குரூப் சுற்று முடிவில் ஒவ்வொரு குரூப்பிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணி சூப்பா் 4 கட்டத்துக்கு முன்னேறும். அந்தச் சுற்றின் முடிவில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணி நேரடியாக இறுதி ஆட்டத்தில் மோதும்.

போட்டியில் 3 முறை சாம்பியனான இந்தியா, தனது முதல் ஆட்டத்தில் சீனாவையும் (ஆக. 29), அடுத்து ஜப்பானையும் (ஆக. 31), தொடா்ந்து கஜகஸ்தானையும் (செப். 1) எதிா்கொள்கிறது. ரேங்கிங் வாய்ப்பு மூலமாக உலகக் கோப்பைக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்துவிட்ட இந்தியாவுக்கு, இந்தப் போட்டியே கையிலிருக்கும் கடைசி வாய்ப்பாகும்.

நேரலை: இந்தியா - சீனா ஆட்டம்; மாலை 3 மணி; சோனி டென், சோனி லைவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments