முகப்பு
செய்திகள்

ஸ்குவாஷ்: காலிறுதிச்சுற்றில் வேலவன், அனாஹத்

ஹெச்சிஎல் ஸ்குவாஷ் இந்தியா டூர் 4 போட்டியில், இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், அனாஹத் சிங் உள்ளிட்டோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

Updated On : 2 டிசம்பர், 2025 at 9:51 PM
பகிர்:

ஹெச்சிஎல் ஸ்குவாஷ் இந்தியா டூர் 4 போட்டியில், இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், அனாஹத் சிங் உள்ளிட்டோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

ரவுண்ட் ஆஃப் 16-இல் ஆடவர் பிரிவில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் வேலவன் 11-7, 11-8, 11-7 என்ற கேம்களில், இலங்கையின் ரவிந்து லக்சிரியை வீழ்த்தினார். வீர் சோட்ரனி 8-11, 8-11, 11-7, 11-5, 11-6 என சக இந்தியரான சூரஜ்குமார் சந்த்தை வென்றார்.

மகளிர் பிரிவில் முதலிடத்தில் இருக்கும் அனாஹத் சிங் 11-7, 11-7, 11-7 என்ற வகையில், செக் குடியரசின் தமாரா ஹோஸ்பேரோவாவை வெளியேற்றினார். ஜோஷ்னா சின்னப்பா 11-5, 11-8, 11-4 என்ற கேம்களில் நியூஸிலாந்தின் எல்லா ஜேன் லாஷை சாய்த்தார். தன்வி கன்னா 12-10, 11-6, 11-6 என இத்தாலியின் கிறிஸ்டினா டார்டரோனை வீழ்த்தினார்.

எனினும், திவாகர் சிங், சானியா வத்ஸ், ராதிகா சுதந்திரா சீலன், நிரூபமா துபே ஆகியோர் தங்கள் பிரிவில் தோல்வி கண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →