குகேஷுடன் விளையாடிய கார்ல்சென்.  படம்: எக்ஸ் / கிராண்ட்செஸ் டூர்.
செய்திகள்

செஸ் விளையாட பிடிக்கவில்லை..! குகேஷிடம் மீண்டும் தோற்ற பிறகு கார்ல்சென் பேட்டி!

குகேஷிடம் மீண்டும் தோற்ற பிறகு மாக்னஸ் கார்ல்சென் பேசியதாவது...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக வீரர் டி. குகேஷிடம் மீண்டும் ஒருமுறை மாக்னஸ் கார்ல்சென் தோல்வியுற்றார். அதன்பிறகு கார்ல்சென் அளித்த பேட்டியில் தனக்கு செஸ் விளையாட பிடிக்கவில்லை எனக் கூறியது பேசுபொருளாகியுள்ளது.

குரேஷியாவில் நடைபெறும் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஜ் தொடரின் 6-ஆவது சுற்றில் உலக சாம்பியனும் தமிழக வீரருமான குகேஷ் முன்னாள் உலக சாம்பியனும் உலகின் நம்.1 வீரரான மாக்னஸ் கார்ல்செனும் மோதினார்கள்.

குகேஷ் கறுப்பு நிற காய்களுடனும் கார்ல்சென் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார்கள்.

இந்தப் போட்டியில் குகேஷின் 49-ஆவது நகர்த்தலில் கார்ல்சென் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.

சமீபத்தில் நார்வே செஸ் தொடரிலும் கார்ல்செனை குகேஷ் வீழ்த்தினார். இருப்பினும், கார்ல்சென் 7-ஆவது முறையாக நார்வே செஸ் பட்டத்தை வென்றார். அதனால்தான் அவர் உலகின் நம்.1 வீரராக இருக்கிறார்.

தமிழக வீரர் குகேஷை பலமுறை பலவீனமாக வீரர் என்றுகூறிய கார்ல்சென் ஒரே மாதத்திற்குள் 2 முறை தோல்வியுற்றுள்ளார்.

போட்டிக்குப் பிறகு கார்ல்சென் கூறியதாவது:

தற்போதைக்கு எனக்கு செஸ் விளையாடவே பிடிக்கவில்லை. நான் விளையாடும்போது எனக்கு சரியான மனநிலை அமையவில்லை.

நான் தொடர்ச்சியாக தயங்கி தயங்கி விளையாடியதால் தற்போது மோசமான நிலைக்கு உள்ளாகியுள்ளேன்.

குகேஷ் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்தத் தொடர் மிகவும் நீண்டது. தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வென்றது பாராட்டத்தக்கது என்றார்.

World number one Magnus Carlsen says he is struggling to enjoy chess after suffering a second consecutive defeat to reigning world champion D Gukesh, who the Norwegian has described as a "weak" player multiple times.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் மகா கும்பாபிஷேகம்

மதுரையில் இன்று தவெக 2-ஆவது மாநில மாநாடு: அரங்கைப் பாா்வையிட்டாா் விஜய்

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

காா் மீது லாரி மோதல்: பாஜக மாவட்ட தலைவா் உள்பட 4 போ் காயம்

திருச்சியில் உலா் துறைமுகம்: மத்திய அமைச்சா்களிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT