டென்னிஸ் ராக்கெட் இழைநார்களினால் தோல்வி..! எம்மா ரடுகானு விரக்தி!
விம்பிள்டனில் எம்மா ரடுகானு தனது தோல்விக்குக் கூறிய காரணம் குறித்து...
புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில் மூன்றாவது சுற்றில் தோல்வியுற தனது டென்னிஸ் - ராக்கெட்டின் இழைநார்கள் (strings) கோளாறாக இருந்தது ஒரு காரணம் என எம்மா ரடுகானு கூறியுள்ளார்.
மகளிர் ஓபன் பிரிவில் 3-ஆவது சுற்றில் உலகின் நம்.1 வீராங்கனையாக சபலென்காவும் இங்கிலாந்தின் நம்.1 வீராங்கனை எம்மா ரடுகானுவும் மேல்தளம் மூடப்பட்ட சென்டர் கோர்ட்டில் மோதினார்கள்.
இந்தப் போட்டியில் சபலென்கா 7-6 (6) 6-4 என த்ரில் வெற்றி பெற்றார்.
Advertisement
Advertisement
இதில் எம்மா ரடுகானு தோல்வியுற்றாலும் பெரும்பாலும் வெற்றிபெறும் இடத்திலிருந்து சில மில்லி மீட்டர்களில் தோல்வியுற்றார். இந்தத் தோல்வி குறித்து எம்மா ரடுகானு பேசியதாவது:
இறுக்கமான இழைநார்களினால் விரக்தியடைந்தேன்
பந்துகள் அதிகமாக பறந்ததாக உணர்ந்தேன். எனது அனைத்து டென்னிஸ் ராக்கெட்டுகளும் போட்டிக்காக புதியதாக இழைநார்களை பின்னக் கொடுத்திருந்தேன்.
ராக்கெட்டில் இழைநார்கள் இறுக்கமாக பின்னப்பட்டதாதயார் செய்யப்பட்டிருந்தது. அது இந்தப் போட்டிக்கு முற்றிலும் வித்தியாசமாக அமைந்துவிட்டது.
திடலில் கூரை மூடப்பட்டிருந்ததால் அப்படி மாறியிருக்கலாம். நான் 2 ராக்கெட்டுகளின் கம்பிகளை தளர்வாக அமைக்கும்படி அனுப்பினேன்.
அவர்கள் அதை மாற்றுவதற்கு 20 நிமிடங்கள் ஆகின. இருந்தும் எனக்கு கடினமாக இருந்தது. எனக்கு இதெல்லாம் விரக்தியை உண்டாக்கியது. ஆனால், எனக்கு வேறு வழியில்லை. நான் சரியாக விளையாடியிருக்க வேண்டும் என்றார்.
எம்மா ரடுகானுவின் சிறப்பான ஆட்டத்துக்கு திடலில் இருந்த அனைவருமே எழுந்து நின்று கைதட்டினார்கள்.
Emma Raducanu expressed frustration with having to get a couple of her rackets re-strung during her third-round loss to top-ranked Aryna Sabalenka at Wimbledon.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.