FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

விம்பிள்டன்: முதல் சாம்பியன் பட்டத்தை வென்றார் சின்னர்!

விம்பிள்டனில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் இத்தாலியின் யானிக் சின்னா் சாம்பியன் கோப்பை வென்றாா்.

Updated On : 14 ஜூலை 2025, 1:17 am IST
முதல் சாம்பியன் பட்டதை வென்றார் சின்னர்! - படம் | ஏபி
பகிர்:

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் இத்தாலியின் யானிக் சின்னா் சாம்பியன் கோப்பை வென்றாா். விம்பிள்டன் வென்ற முதல் இத்தாலிய வீரராக அவா் வரலாறு படைத்திருக்கிறாா்.

உலகின் நம்பா் 1 வீரரான சின்னா், இறுதிச்சுற்றில் 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட்களில், உலகின் 2-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸை 3 மணிநேரம், 3 நிமிஷங்களில் வீழ்த்தினாா்.

ஆஸ்திரேலிய ஓபன், யுஎஸ் ஓபனில் நடப்பு சாம்பியனாக இருக்கும் சின்னருக்கு, விம்பிள்டன் போட்டியில் இது முதல் சாம்பியன் பட்டமாகும். ஒட்டுமொத்தமாக இது அவரின் 4-ஆவது கிராண்ட்ஸ்லாம் கோப்பை.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments