126 ஆண்டுகளை நிறைவுசெய்த பார்சிலோனா..! புதிய திடலில் சிறப்பு ஏற்பாடு!
புகழ்பெற்ற கால்பந்து கிளப் எப்ஃசி பார்சிலோனா குறித்து...
கால்பந்து கிளப் அணியான பார்சிலோனா அணியின் 126ஆவது ஆண்டிற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், கிளப்பின் புணரமைக்கப்பட்ட திடலில் நடைபெறும் அல்வெஸுக்கு எதிரான போட்டியில் இந்தச் சிறப்பான நாளைக் கொண்டாட, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பார்சிலோனாவின் சாதனைகள்
Advertisement
Advertisement
உலக கால்பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் ஸ்பெயினில் உள்ள எஃப்சி பார்சிலோனா அணிக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது. இந்தக் கால்பந்து கிளப் அணி 1899ஆம் ஆண்டு நவ.29ஆம் தேதி உருவாக்கப்பட்டது.
பார்சிலோனா அணி உள்ளூர் போட்டிகளில் 74 கோப்பைகளும் சர்வதேச போட்டிகளில் 22 கோப்பைகள் என மொத்தமாக 142 கோப்பைகளை வென்றுள்ளது.
சமூக வலைதளங்களில் அதிகமாக பின்பற்றப்படும் ஒரு அணியாகவும் பார்சிலோனா இருக்கிறது. பேலன்தோர் விருதுகளை அதிகம் முறை வென்றவர்களும் இந்த அணியில் இருக்கிறார்கள்.
தற்போதைய லா லீகா தொடரில் பார்சிலோனா அணி 31 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
பார்சிலோனாவில் மெஸ்ஸி
பார்சிலோனா அணிக்கு முக்கிய அடையாளமாக மெஸ்ஸி இருக்கிறார். இவர் 2004 முதல் 2021 வரை மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக விளையாடியுள்ளார்.
474 கோல்கள் இந்த அணியில் விளையாடி அடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மொத்தம் 17 ஆண்டுகள் விளையாடியுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு மெஸ்ஸியின் ஊதியம் பார்சிலோனா அணியின் குறிப்பிட்ட சதவிகிதத்தைவிட (விதி) அதிகமாக இருப்பதால் அவரது ஒப்பந்தத்தை நிராகரித்தது. மெஸ்ஸி தற்போது இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.
பார்சிலோனா அணிக்காக அதிக முறை (778) விளையாடியவர்களில் லயோனல் மெஸ்ஸி முதலிடத்தில் இருக்கிறார்.
இந்த கிளப்பில் அதிக கோல்கள் அடித்தவர் பட்டியலிலும் மெஸ்ஸி இருக்கிறார்.
Fans are celebrating the 126th anniversary of the football club Barcelona.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.