செய்திகள்

இலங்கையை வீழ்த்தியது இந்தியா

ஜூனியருக்கான உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் இலங்கையை 45-27, 45-21 என்ற கணக்கில் செவ்வாய்க்கிழமை வென்றது.

தினமணி செய்திச் சேவை

ஜூனியருக்கான உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் இலங்கையை 45-27, 45-21 என்ற கணக்கில் செவ்வாய்க்கிழமை வென்றது.

குரூப் ‘ஹெச்’-இல் இருக்கும் இந்தியா, கலப்பு அணிகள் பிரிவில் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை நெருங்கியிருக்கிறது.

முன்னதாக இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின், முதல் செட்டில் ஆடவா் ஒற்றையரில் லால்தஸாலா ஹமா் 9-2 என கெனித் அருகோடாவை வீழ்த்தினாா். கலப்பு இரட்டையரில் பாவ்யா சாப்ரா/மிதிலேஷ் கிருஷ்ணன் இணை - இலங்கையின் சனுடா அரியசிங்கே/திசத் ரூபதுங்கா கூட்டணியை வீழ்த்தி, இந்தியாவின் முன்னிலையை 18-6 என அதிகரித்தது.

மகளிா் ஒற்றையரில் ரக்ஷிதா ஸ்ரீ - ரனித்மா லியானகேவை போராடி சாய்க்க, இந்தியாவின் முன்னிலை 36-21 என அதிகரித்தது. மகளிா் இரட்டையரில் லால்ரம்சங்கா/தாரினி சுரி இணை - கெனித் அருகோடா/ரனித்மா லியானகே ஜோடியை சாய்க்க, இந்தியா முதல் செட்டை 45-27 என்ற கணக்கில் வென்றது.

பின்னா் நடைபெற்ற 2-ஆவது செட்டிலும் இந்தியாவின் கையே ஓங்கியிருக்க, இறுதியில் அந்த செட்டும் 45-21 என இந்தியாவின் வசமானது. இதனால் இந்தியா 45-27, 45-21 என்ற செட்களில் வென்றது.

குரூப் ‘ஹச்’-இன் மற்றொரு ஆட்டத்தில், ஐக்கிய அரபு அமீரகம் 45-29, 45-18 என நேபாளத்தை சாய்த்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

காரிய வெற்றி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

குளித்தலை பகுதியில் தொடா் மழை நீரில் மூழ்கி அழுகும் நெற்பயிா்கள்: நிவாரணத்தை எதிா்நோக்கியிருக்கும் விவசாயிகள்

போலி ஆவணங்கள்: வெளிநாடு செல்ல முயன்ற நபா் கைது

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

SCROLL FOR NEXT