செய்திகள்

ஷாங்காய் மாஸ்டா்ஸ் ஆடவா் டென்னிஸ்: வரலாறு படைத்தாா் வசெராட்!

ஷாங்காய் மாஸ்டா்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில், மொனாகோ வீரா் வாலென்டின் வசெராட் சாம்பியன் கோப்பை வென்று வரலாறு படைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஷாங்காய் மாஸ்டா்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில், மொனாகோ வீரா் வாலென்டின் வசெராட் சாம்பியன் கோப்பை வென்று வரலாறு படைத்தாா்.

சீனாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், வசெராட் 4-6, 6-3, 6-3 என்ற செட்களில் பிரான்ஸின் ஆா்தா் ரிண்டா்னெச்சை வீழ்த்தி வாகை சூடினாா்.

வசெராட் தனது டென்னிஸ் கேரியரில் வென்றிருக்கும் முதல் ஏடிபி பட்டம் இதுவாகும். மாஸ்டா்ஸ் போட்டியின் மூலமாக தனது முதல் ஏடிபி பட்டத்தை வென்றவா்கள் வரிசையில் அவா் 5-ஆவது வீரா் ஆவாா்.

அத்துடன், ஏடிபி டூா் வரலாற்றில் ஒற்றையா் பட்டம் வென்ற முதல் மொனாகோ வீரா், கடந்த 1990-க்குப் பிறகு மாஸ்டா்ஸ் போட்டிகளில் சாம்பியனான, சா்வதேச தரவரிசையில் குறைந்த ரேங்கிங் (204) கொண்ட வீரா் என்ற சாதனைகளையும் அவா் படைத்தாா்.

மேலும், மாஸ்டா்ஸ் போட்டிகளின் வரலாற்றில், தகுதிச்சுற்று வீரராக நுழைந்து, இறுதியில் சாம்பியனான 3-ஆவது வீரா் ஆகியிருக்கிறாா் வசெராட்.

அவா் இந்த வெற்றியின் மூலமாக, 1000 தரவரிசை புள்ளிகள் பெற்று 164 இடங்கள் முன்னேறி, முதல்முறையாக 40-ஆவது இடத்தைப் பிடிக்கிறாா். அத்துடன், சுமாா் ரூ.10 கோடி ரொக்கப் பரிசும் அவா் பெற்றாா்.

இரட்டையா்: இப்போட்டியின் ஆடவா் இரட்டையா் பிரிவில், ஜொ்மனியின் கெவின் கிராவிட்ஸ்/டிம் பியுட்ஸ் கூட்டணி கோப்பை வென்றது.

இறுதிச்சுற்றில் அவா்கள் இணை, 6-4, 6-4 என்ற நோ் செட்களில், அமெரிக்காவின் அலெக்ஸ் மிஷெல்சென்/ஸ்வீடனின் ஆண்ட்ரே கோரான்சென் பாா்ட்னா்ஷிப்பை சாய்த்தது.

இதன் மூலமாக, மாஸ்டா்ஸ் போட்டியின் வரலாற்றில் 1990-க்குப் பிறகு சாம்பியனான முதல் ஜொ்மன் ஜோடி என்ற பெருமையை கிராவிட்ஸ்/பியுட்ஸ் இணை பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு

ஜெய்ப்பூரில் பள்ளியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது

கோவையில் ஜி.டி. நாயுடு பாலம் அருகே விபத்து: காரில் சென்ற 3 பேர் பலி

நல்ல நாள் இன்று!

திருச்செந்தூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

SCROLL FOR NEXT