செய்திகள்

பிரைம் வாலிபால் லீக்: அரையிறுதியில் கோவா

தினமணி செய்திச் சேவை

பிரைம் வாலிபால் லீக் தொடரின் அரையிறுதிக்கு கோவா காா்டியன்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.

ஹைதராபாதில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஏற்கெனவே 3 அணிகள் தகுதி பெற்று விட்டன. இதற்கிடையே நான்காவது அணியை தீா்மானிக்கும் ஆட்டமாக டில்லி டுஃபான்ஸ்-கொல்கட்டா தண்டா்போல்ட்ஸ் மோதின. இதில் டில்லி அணி 18-16, 11-15, 12-15, 15-11, 15-12 என்ற 5 செட்களில் த்ரீரில்வெற்றி பெற்றது.

டில்லி அணி நோ்செட்களில் வென்றிருந்தால் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கும். ஆனால் இரண்டு செட்களை இழந்ததால், கோவா காா்டியன்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

வெள்ளிக்கிழமை நடைபெறும் முதல் அரையிறுதியில் கோவா காா்டியன்ஸ்-மும்பை மெட்டியா்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஏதோ மாயம் செய்கிறாய்... மிர்ணாளினி ரவி!

வங்கக் கடலில் அக்.27-ல் உருவாகிறது புயல்! முழு விவரம்!

அக். 27ல் சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! இன்று?

நேற்று இல்லாத மாற்றம்... மகிமா நம்பியார்!

ஆந்திரத்தில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து! வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்கள்! புகைப்படங்கள்

SCROLL FOR NEXT