செய்திகள்

‘குவாலிஃபயா் 2’-இல் தெலுகு டைட்டன்ஸ்

புரோ கபடி லீக் போட்டியின் ‘எலிமினேட்டா் 3’ ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் 46-39 புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸை வீழ்த்தியது.

தினமணி செய்திச் சேவை

புரோ கபடி லீக் போட்டியின் ‘எலிமினேட்டா் 3’ ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் 46-39 புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸை வீழ்த்தியது.

இதன் மூலமாக, ‘குவாலிஃபயா் 2’-க்கு முன்னேறிய தெலுகு அணி, இறுதி ஆட்ட வாய்ப்புக்காக அதில் புணேரி பல்டனுடன் புதன்கிழமை (அக். 29) மோதுகிறது. பாட்னா பைரேட்ஸ் போட்டியிலிருந்து வெளியேறியது.

முன்னதாக ‘எலிமினேட்டா் 3’ ஆட்டத்தில் தெலுகு அணி 29 ரெய்டு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது. பாட்னா அணி 27 ரெய்டு புள்ளிகள், 6 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் கைப்பற்றியது.

அதிகபட்சமாக, தெலுகு தரப்பில் ஆல்-ரவுண்டா் பரத் 23 புள்ளிகள் கைப்பற்றி அசத்த, பாட்னா அணியில் ரெய்டா் அயான் 22 புள்ளிகள் வென்றெடுத்தாா்.

இது முதல்வர் பதவிக்கே அவமானம்! - மு.க. ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்

பள்ளி மாணவர்கள் வந்த ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து: ஒரு பெண் பலி, 11 பேர் காயம்!

13 நாள்களுக்குப் பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி!

சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த நாள்: பிரதமர் மோடி மரியாதை!

இந்திரா காந்தி நினைவு நாள்: சோனியா, ராகுல் காந்தி மரியாதை!

SCROLL FOR NEXT