மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்: இந்திய அணியில் இரு தமிழா்கள்
செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ள இந்திய அணியில் இரு தமிழா்கள் இடம் பிடித்துள்ளனா்.
செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ள இந்திய அணியில் இரு தமிழா்கள் இடம் பிடித்துள்ளனா்.
தென்னாப்பிரிக்காவின் பிரெடோரியா நகரில் வரும் 25-ஆம் தேதி முதல் மே 2-ஆம் தேதி வரை 2 ஒருநாள் மற்றும் 3 டி20 ஆட்டங்களில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
இதற்கான இந்திய அணியை, இந்திய செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் சங்கம் (ஐடிசிஏ) அண்மையில் அறிவித்தது. இதில் தமிழகத்திலிருந்து எஸ். சாய் ஆகாஷ், ஈ.சுதா்சன் ஆகிய இரு வீரா்கள் இடம்பிடித்துள்ளனா்.
Advertisement
அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சாய் ஆகாஷ், கடந்த பிப்ரவரியில் ஒடிஸாவில் நடைபெற்ற செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விளையாடியிருந்தாா். உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டதன் அடிப்படையில் சுதா்சன் இந்த அணிக்குத் தோ்வாகியிருக்கிறாா்.
மொத்தம் 14 போ் கொண்ட இந்த அணிக்கு, தில்லியை சோ்ந்த வீரேந்தா் சிங் கேப்டனாக இருக்கிறாா். பிசிசிஐ ஆதரவு பெற்ற ஐடிசிஏ, சா்வதேச கவுன்சில் மற்றும் ஆசிய சங்கத்தின் அங்கீகாரம் பெற்ாகும்.