15 வயதில் வைபவ் சூர்யவன்ஷி..! இந்திய சீனியர் அணியில் அறிமுகமாகுவாரா?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இன்றுடன் தனது 15ஆவது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார்.
இந்திய அணியில் விளையாட குறைந்தபட்ச வயது 15 என்பதால், வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் தேர்வாக வாய்ப்புள்ளது. அநேகமாக அவர் டி20யில் களமிறங்க அதிகமான வாய்ப்புள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பிகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி (15 வயது) முதன்முதலாக 2025 ஐபிஎல் தொடரில் 13 வயதில் ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் இளம் வயதில் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரராக சாதனை படைத்தார்.
கடந்த ஐபிஎல் சீசனில் 7 இன்னிங்ஸில் 250 ரன்கள் குவித்தார். ஸ்டிரைக் ரேட் 206.55ஆக இருந்தது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து வரலாறு படைத்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த அபாரமான செயல்பாட்டுக்குப் பிறகு, இந்திய யு19 அணியில் களமிறங்கினார். ஆசிய கோப்பையிலும் சிறப்பாக செயல்பட்ட இவர், யு19 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி 175 ரன்கள் எடுத்து 6ஆவது முறையாக இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார்.