முகப்பு
செய்திகள்

ஷாய் ஹோப் தலைமையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி!

இந்தியா, இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஷாய் ஹோப் தலைமையில் அறிவிக்கப்பட்டது.

Updated On : 26 ஜனவரி, 2026 at 9:58 PM
ஷாய் ஹோப்
பகிர்:

இந்தியா, இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஷாய் ஹோப் தலைமையில் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

கடந்த உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்ற 11 வீரா்கள் இந்த ஆண்டு போட்டிக்கான அணியிலும் இடம் பிடித்துள்ளனா். அறிமுக பேட்டா் குவென்டின் சாம்சன், அனுபவ பௌலா் ஷமாா் ஜோசஃப் உள்ளிட்டோா் இந்த அணியில் அங்கம் வகிக்கின்றனா்.

இரு முறை சாம்பியனான (2012, 2016) மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதல் ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை பிப்ரவரி 7-ஆம் தேதி கொல்கத்தாவில் சந்திக்கிறது. அந்த அணி சாம்பியனானபோது கேப்டனாக இருந்த டேரன் சமி, தற்போது அதன் தலைமைப் பயிற்சியாளராக இருக்கிறாா்.

அணி விவரம்: ஷாய் ஹோப் (கேப்டன், வி.கீ.), ஜான்சன் சாா்லஸ் (வி.கீ.), ராஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோா்டு, ஷிம்ரன் ஹெட்மயா், ஜேசன் ஹோல்டா், அகீல் ஹுசைன், ஷமாா் ஜோசஃப், பிராண்டன் கிங், குடாகேஷ் மோட்டி, ரோவ்மென் பாவெல், ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு, குவென்டின் சாம்சன், ஜேடன் சீல்ஸ், ரொமேரியோ ஷெப்பா்டு.

முழு கட்டுரையைப் படிக்க →