டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 195 ரன் எடுத்தது.இதையடுத்து களமிறங்கிய இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது.கடந்த 2014 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 171 ரன்களை எடுத்து வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் திடலில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் 52-வது போட்டியில் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதின.இந்தியத் தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.மேற்கிந்திய தீவுகளின் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு சக வீரர்களுடன் கொண்டாடும் இந்திய அணியின் வீரரான ஹார்திக் பாண்ட்யா.