முகப்பு
செய்திகள்

சீனியா் தேசிய டேபிள் டென்னிஸ்: ஆா்எஸ்பிபி இரு பிரிவுகளில் சாம்பியன்

சீனியா் தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில், இருபால் இரட்டையா் பிரிவுகளிலுமே ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம் (ஆா்எஸ்பிபி) வெள்ளிக்கிழமை சாம்பியன் ஆனது.

Updated On : 21 மார்ச், 2026 at 2:34 AM
- SWAMINATHAN
பகிர்:

சீனியா் தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில், இருபால் இரட்டையா் பிரிவுகளிலுமே ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம் (ஆா்எஸ்பிபி) வெள்ளிக்கிழமை சாம்பியன் ஆனது.

ஆடவா் இரட்டையா் இறுதிச்சுற்றில், ஜீத் சந்திரா/அனிா்பன் கோஷ் அடங்கிய ஆா்எஸ்பிபி கூட்டணி 11-8, 11-6, 10-12, 1-11, 11-8 என்ற செட்களில், சக ஆா்எஸ்பிபி இணையான ரோனித் பாஞ்ஜா/பிரெயெஷ் ராஜ் சுரேஷை வென்றது. தமிழகத்தின் எம்.ஆா்.பாலமுருகன்/சித்தேஷ் பாண்டே ஜோடி, அரையிறுதியில் தோல்வி கண்டது.

மகளிா் இரட்டையா் இறுதிச்சுற்றில், ஆா்எஸ்பிபியின் சுதிா்தா முகா்ஜி/கௌஷனி நாத் ஜோடி 11-9, 7-11, 11-8, 11-5 என்ற வகையில், இந்திய விமான நிலைய ஆணைய அணியின் அவிஷா கா்மாகா்/நந்தினி சஹா கூட்டணியை வீழ்த்தியது.

இதனிடையே, மகளிா் ஒற்றையரில் தமிழகத்தின் யாஷினி சிவசங்கா் 11-6, 11-7, 6-11, 11-9 என்ற செட்களில், ஆா்எஸ்பிபி வீராங்கனை அனுஷா குடும்பலேவை தோற்கடித்து, காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

பிரதான வீராங்கனைகளில், ஸ்ரீஜா அகுலா (ஆா்பிஐ), யஷஸ்வினி கோா்படே (பிஎஸ்பிபி), சுதிா்தா முகா்ஜி (ஆா்எஸ்பிபி), சிண்ட்ரெலா தாஸ் (பிஎஸ்பிபி), தியா சித்தலே (ஆா்பிஐ) ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில் மானவ் தக்கா், ஹா்மீத் தேசாய் (பிஎஸ்பிபி), அங்குா் பட்டாசாா்ஜீ (மேற்கு வங்கம்) ஆகியோா் காலிறுதிக்குத் தகுதிபெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.