டி-20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு 148 ரன்கள் இலக்கு
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.
டி20 உலகக் கோப்பைடி-20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு 148 ரன்கள் இலக்கு
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய 2ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியும், ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன. துபை சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ளனர்.
ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹசரத்துலாஹ் ஜாஜை, முகமது ஷஜாத் ஆகியோர் களமிறங்கினர். ஹசரத்துலாஹ் ஜாஜை ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து முகமது ஷஜாதும் 8 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். நடுவரிசை வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் தடுமாறியது.
இதையும் படிக்க- குஜராத்தில் கோவிலுக்குள் நுழைந்ததற்காக தாக்கப்பட்ட தலித் குடும்பத்தினர்: 20 பேர் மீது வழக்குப்பதிவு
இந்த நிலையில் களம்கண்ட கேப்டன் முகமது நபியும், குல்பதின் நைப்பும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி சரிவிலிருந்து மீண்டது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. முகமது நபி, குல்பதின் நைப் தலா 35 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் இமாத் வாசீம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.