நாகை, காரைக்கால் மீனவர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
மீன்பிடித் தொழிலுக்குக் கடலில் எல்லைக் கட்டுப்பாடு கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாகை, காரைக்கால் மாவட்ட விசைப் படகு மீனவர்கள் கடந்த டிசம்பர் 30-ம் தேதி முதல் மேற்கொண்டிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் சனிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.
தமிழ்நாடுநாகை, காரைக்கால் மீனவர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
மீன்பிடித் தொழிலுக்குக் கடலில் எல்லைக் கட்டுப்பாடு கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாகை, காரைக்கால் மாவட்ட விசைப் படகு மீனவர்கள் கடந்த டிசம்பர் 30-ம் தேதி முதல் மேற்கொண்டிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் சனிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.
மீன்பிடித் தொழிலுக்குக் கடலில் எல்லைக் கட்டுப்பாடு கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாகை, காரைக்கால் மாவட்ட விசைப் படகு மீனவர்கள் கடந்த டிசம்பர் 30-ம் தேதி முதல் மேற்கொண்டிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் சனிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.
நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவக் கிராம பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டம், நாகை டாடா நகர் சமுதாயக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. வேலைநிறுத்தத்தை ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் கைவிடுவது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.நாகை வட்ட மீனவக் கிராம பஞ்சாயத்தார் சில நாள்களுக்கு முன்பு மீன்வளத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.
அப்போது கோரிக்கை குறித்து முதல்வரின் கவனத்துக் கொண்டு சென்று, முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்ததால் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.