முகப்பு
தமிழ்நாடு

"காடுவெட்டி குருவுக்கு எதிரான தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும்'

பாமக சட்டப்பேரவை உறுப்பினர் காடுவெட்டி குருவுக்கு எதிரான தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 13 மே 2013, 3:26 am IST
பகிர்:

பாமக சட்டப்பேரவை உறுப்பினர் காடுவெட்டி குருவுக்கு எதிரான தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

பாமகவைச் சேர்ந்த குருவும் அவரது இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்களும் தலித் மக்கள் மீது தாக்குதல் தொடுப்பது, வன்முறையைத் தூண்டுவது, அரசியல் தலைவர்களைக் கொச்சைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தவறானது.

Advertisement

Advertisement

இந்த நடவடிக்கைகள் தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்தக் கூடியதுடன், மக்கள் ஒற்றுமையைச் சீர்குலைக்கக் கூடியதுமாகும்.

தமிழக மக்கள் இதற்கு ஒரு போதும் இரையாகிவிடக் கூடாது.

தமிழகத்தின் பொது அமைதியையும், மக்கள் ஒற்றுமையையும் பாதுகாக்க மாநில அரசு சட்ட வரம்புக்குட்பட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதேநேரத்தில் நீதிமன்ற விசாரணையின்றி தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி யார் ஒருவரையும் கைது செய்து சிறையிலடைப்பது ஜனநாயக அணுகுமுறையா

காது.

தற்போது குருவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தியிருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை சரியான அணுகுமுறையாக இல்லை.

இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.