முகப்பு
தமிழ்நாடு

சங்கரன்கோவில் ஆடித்தவசு விழா: நெல்லை மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் ஆடித்தவசு விழாவையொட்டி இம் மாவட்டத்திற்கு

Updated On : 8 ஆகஸ்ட், 2014 at 7:41 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் ஆடித்தவசு விழாவையொட்டி இம் மாவட்டத்திற்கு சனிக்கிழமை (ஆக. 9) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் ஆடித்தவசு விழா சனிக்கிழமை (ஆக.9) நடைபெறுகிறது. இந்த நாளில் இம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி நிறுவனங்களுக்கும் மற்றும் பொது நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 இன் கீழ் அறிவிக்கப்பட்டும் விடுமுறை அல்ல. எனவே, வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. உள்ளூர் விடுமுறை நாளன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படும் முக்கியத் தேர்வுகள் நடைபெறும். திருநெல்வேலி மாவட்ட கருவூலம், அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு அரசு காப்புகள் தொடர்பான அவசரப் பணிகளை கவனிப்பதற்காகச் செயல்படும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.