விருதுநகர் அருகே வெள்ளைத்திரிகளை கடத்திய 2 பேர் கைது
விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் வெள்ளைத்திரி கட்டுக்களை கடத்தியதாக வச்சக்காரப்பட்டி போலீஸார் 2 பேரை கைது செய்தனர்.
விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் வெள்ளைத்திரி கட்டுக்களை கடத்தியதாக வச்சக்காரப்பட்டி போலீஸார் 2 பேரை கைது செய்தனர்.
விருதுநகர் அருகே சிவகாசியில் இருந்து முதலிப்பட்டி வழியாக அனுமதியின்றி பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி கட்டுக்கள் கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் வியாழக்கிழமை அதிகாலையில் முதலிப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் வச்சக்காரப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் குமரேசன் தலைமையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் மூட்டைகளுடன் வந்துள்ளனர். அப்போது, அவர்கள் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது சாக்கு மூட்டையில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் 2200 வெள்ளைத்திரி கட்டுக்கள் இருந்தது. மேலும், அவர்களிடம் விசாரணை செய்ததில் சிவகாசி புதுத்தெருவைச் சேர்ந்த ராஜ்(27), ராஜா(25) என்பதும் முதலிப்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைக்கு கொண்டு செல்வதாகவும் தகவல் தெரிவித்தனர். உடனே அவர்களிடம் இருந்த வெள்ளைத்திரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் மேற்குறிப்பிட்ட 2 பேர் மீதும் வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Advertisement