தமிழ்நாடு

அழகு நிலையத்துக்குள் பர்தா அணிந்து சென்று கத்திமுனையில் நகையை பறித்த மர்மநபர்

மதுரை நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அழகு நிலையத்துக்குள் பர்தா அணிந்துவந்த மர்மநபர் கத்தியைக் காட்டி பெண்ணிடம் தங்கநகைகளை

ஜெயப்பாண்டி

மதுரை நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அழகு நிலையத்துக்குள் பர்தா அணிந்துவந்த மர்மநபர் கத்தியைக் காட்டி பெண்ணிடம் தங்கநகைகளை பறித்துச்சென்றுள்ளார்.

 மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செüந்திரராஜன். இவரது மனைவி ஹேமா (36). இவர் மதுரை காமராஜர் சாலை முனிச்சாலை சந்திப்பு பகுதியில் அழகுநிலையம் வைத்துள்ளார்.

 புதன்கிழமை மாலையில் அவர் தனியாக இருந்தபோது, பர்தா அணிந்தநிலையில் மர்மநபர் வந்துள்ளார். உள்ளே நுழைந்த மர்மநபர் திடீரென கதவை மூடிவிட்டு கத்தியைக் காட்டி ஹேமா அணிந்திருந்த பதினொன்றரைப் பவுன் தங்கநகைகளை பறித்துள்ளார். பின்னர் ஷட்டரைப் பூட்டிவிட்டு தப்பியோடிவிட்டார்.

 செல்போன் மூலம் பக்கத்து கடைகாரர்களுக்கு ஹேமா தகவல் தெரிவித்தார். அதன் பின்னரே ஷட்டர் திறக்கப்பட்டு ஹேமா மீட்கப்பட்டார். மர்மநபர் தாக்கியதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்.

 இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெப்பக்குளம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT