முகப்பு
தமிழ்நாடு

நெல்லை மாவட்டத்தில் சூரியமின் திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு

சங்கரன்கோவில் வட்டம்,  மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட நடுவக்குறிச்சி, கஸ்பா, வல்லராமபுரம், அகிலாண்டபுரம், பொய்கைமேடு, குத்தாலப்பேரி, ஆட்கொண்டார்குளம், கே.வி.ஆலங்குளம், கீழவீரசிகாமணி

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:55 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் சூரியஒளி மின் உற்பத்தி திட்டத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் வட்டம்,  மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட நடுவக்குறிச்சி, கஸ்பா, வல்லராமபுரம், அகிலாண்டபுரம், பொய்கைமேடு, குத்தாலப்பேரி, ஆட்கொண்டார்குளம், கே.வி.ஆலங்குளம், கீழவீரசிகாமணி கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை வந்து அளித்த மனு:
எங்கள் பகுதியில் சுமார் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களை, தமிழக அரசு சூரிய ஒளி மின் திட்டத்திற்காக வருவாய்த்துறை மூலம் கையகப்படுத்துவதற்காக கணக்கீட்டு பணியினை தொடங்கியுள்ளதாக அறிகிறோம்.

மேலும், தனியார் காற்றாலை உரிமையாளர்களும் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி வரும் நிலையில் பலர் விவசாயத்தை கைவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் அரசின் சூரியஒளி மின் திட்டத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் திட்டத்தை மறு பரிசீலனை செய்யவேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →