குடியரசுத் தலைவர் உரைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வரவேற்பு
நாட்டின் 16வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா
நாட்டின் 16வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது: புதிய அரசின் முக்கியத்துவம் தரும் கொள்கைள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளை அங்கீகரிக்கும் வகையில் உரை உள்ளது/ அனைத்து துறைகளின் பிரச்னைகளும் குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தரப்படும் என்பது வரவேற்கதக்கது, ஒருங்கிணைந்த கூட்டாட்சி முறையை புதிய அரசு அங்கீகரிக்கும் என்பது பாராட்டுக்குரியது இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.