சொத்துக் குவிப்பு வழக்கு: எ.வ.வேலு நீதிமன்றத்தில் ஆஜர்
வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக, செவ்வாய்க்கிழமை முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை
வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக, செவ்வாய்க்கிழமை முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளருமான எ.வ.வேலு நீதிமன்றத்தில் ஆஜாரானார்.
திமுக ஆட்சியின்போது, தண்டராம்பட்டு சட்டசபைத் தொகுதியில் வெற்றி பெற்ற எ.வ.வேலு, தமிழக உணவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். இவரது பதவிக் காலத்தில் வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக 2013 ஜனவரியில் வேலூர் லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர்.
தொடர்ந்து, இவருக்குச் சொந்தமான வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கு திருவண்ணாமலை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) இவ் வழக்கின் விசாரணைக்காக எ.வ.வேலு நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால், அவரது மனைவி ஜீவா வேலு ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி குருமூர்த்தி அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 8-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.