முகப்பு
தமிழ்நாடு

வீட்டு உபயோக சிலிண்டரை வர்த்தக நோக்கத்திற்காக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

வீட்டு உபயோக சிலிண்டரை வர்த்தக நோக்கத்திற்காக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.

Updated On : 25 ஜூன், 2014 at 8:54 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:12 AM

வீட்டு உபயோக சிலிண்டரை வர்த்தக நோக்கத்திற்காக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.

 இதுதொடர்பாக கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.மனோகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடலூர் மாவட்டத்தில் மானிய விலையில் பொதுமக்களுக்கு மான்ய விலையில் வழங்கப்படும் எரிவாயு உருளையை சிலர் வணிக நோக்கத்திற்காகவும் வேறு பல இதர நோக்கத்திற்காக பயன்படுத்துகின்றனர்.

 இதுதொடர்பாக கடந்த வாரம் தணிக்கை மேற்கொண்டதில் 33 வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. எனவே பொதுமக்கள் வீட்டு சமையல் உபயோகம் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது எனவும், மீறி பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.