சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 1985-88 ஆண்டு பயின்ற பிஎஸ்சி கணிதம் (ஆங்கிலவழி) பயின்ற முன்னாள் மாணவ, மாணவியர்கள் 30 பேர் குடும்பத்தினருடன் கல்லூரி வளாகத்தில்
சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 1985-88 ஆண்டு பயின்ற பிஎஸ்சி கணிதம் (ஆங்கிலவழி) பயின்ற முன்னாள் மாணவ, மாணவியர்கள் 30 பேர் குடும்பத்தினருடன் கல்லூரி வளாகத்தில் அண்மையில் (அக்.5) சந்தித்துக் கொண்டனர்.
முன்னாள் மாணவர்களான அண்ணாமலைப் பல்கலைக்கழக கண்காணிப்பாளர் எஸ்.சேகர், முதுநிலை ஆசிரியர் எம்.ராம்குமார், நகை வணிகர்கள் ஆர்.ராமச்சந்திரன், எஸ்.பாலசுப்பிரமணியன், ஆசிரியர் ஆர்.பாலமுருகன், அமெரிக்காவில் வசிக்கும் கே.நடராஜன், அக்க்ஷயா மந்திரி பள்ளி தாளாளர் கே.புருஷோத்தமன் உள்ளிட்ட 30 முன்னாள் மாணவ, மாணவியர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று தங்களது கல்லூரி கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் கே.பி.சுப்பிரமணியன், டி.விஸ்வலிங்கம், என்.சேரமான், கே.பழனியப்பன், ஏ.தெய்வநாயகம், அர்ச்சுணன், எஸ்.சிவக்குமார், மாலினி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினர். பின்னர் 30 பேரும் குடும்பத்தினருடன் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்திற்கு சென்று சுரபுண்ணை காடுகளை ரசித்து திரும்பினர்.