திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 5 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 5 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 100 அரசு, நகராட்சி மற்றும் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக 100 தலைமையாசிரியர் பணியிடங்கள் மற்றும் 900 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களையும் உருவாக்கி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்குசெழியநல்லூர் மற்றும் ஆவுடையானூர்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளையும், தூத்துக்குடி மாவட்டத்தில் கொம்பன்குளம் மற்றும் செங்கோட்டையிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளையும், கன்னியாகுமரி மாவட்டத்தி்ல் கீழ்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியையும் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.