முகப்பு
தமிழ்நாடு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்கள் வருவாய் தலை ஒட்டுவதில் இருந்து விலக்கு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்கள் வருவாய் தலை (ரெவின்யூ ஸ்டாம்ப்) ஒட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:35 AM
பகிர்:

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்கள் வருவாய் தலை (ரெவின்யூ ஸ்டாம்ப்) ஒட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருநெல்வேலி தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலக மண்டல ஆணையர் (பொ) கே.ஷேக்சிந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் பணப் பட்டுவாடா படிவங்களுக்கு வருவாய் தலை ஒட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) பண்டாரு தத்தாத்ரேயா அறிவித்துள்ளார். மேலும், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் க்ளைம் செட்டில்மென்டை மேலும் எளிதாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதுதவிர சந்தாதாரர்கள் தங்களது கேஒய்சி விவரங்களுடன் ஆதார் எண் மற்றும் ஒருங்கிணைந்த கணக்கு எண் செயலாக்கம் செய்யும் பட்சத்தில் கணக்கு முடிக்கும் படிவங்களில் தொழிலதிபர்களின் கையொப்பம் பெறுவதில் இருந்தும் விலக்கு அளிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதனால் ஒரு தொழிலாளி வருங்கால வைப்புநிதியில் பணப் பரிமாற்றங்களின்போது தொழிலதிபரை சாந்திருப்பது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேஒய்சி விவரங்களால் தொழிலாளியின் அடையாளம் உறுதிப்படுத்தப்படுவதால் தொழிலதிபரை சார்ந்திருப்பது படிப்படியாகக் குறைந்து தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் சேவைகளை வேகமாகவும் எளிதாகவும் பெற வாய்ப்பு ஏற்படும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →