முகப்பு
தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:49 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ஓட்டமடம் தெருவைச் சேர்ந்தவர் தர்மர் மகன் மாரிச்செல்வம் (40). இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உண்டு. மாரிச்செல்வம், ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலையம் அருகேயுள்ள ஒரு ஒலி, ஒளி அமைக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

வியாழக்கிழமை திருவண்ணாமலை சாலையில் மாதாநகர் அருகே ஒரு சாமியார் இறந்த 48-வது குருபூஜை நிகழ்ச்சிக்கு பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றது. இதில் மாரிச்செல்வம் வேலை செய்து கொண்டிருந்தார். பந்தலுக்கு மேலாகச் சென்று மின்வயர்களை சரி செய்து கொண்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி கீழே விழுந்து பலத்த காயமுற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிச்செல்வம் உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →