முகப்பு
தமிழ்நாடு

வயர்லெஸ் கருவிகளை நஷ்டஈட்டுத் தொகை ரூ.13 ஆயிரத்துடன் பழுது நீக்கித் தர உத்தரவு

பழுதான வயர்லெஸ் கருவிகளை ரூ.13 ஆயிரம் நஷ்ட ஈட்டுத் தொகையுடன் பழுது நீக்கித் தர ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தமிழ்நாடு

வயர்லெஸ் கருவிகளை நஷ்டஈட்டுத் தொகை ரூ.13 ஆயிரத்துடன் பழுது நீக்கித் தர உத்தரவு

பழுதான வயர்லெஸ் கருவிகளை ரூ.13 ஆயிரம் நஷ்ட ஈட்டுத் தொகையுடன் பழுது நீக்கித் தர ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:56 AM
பகிர்:

பழுதான வயர்லெஸ் கருவிகளை ரூ.13 ஆயிரம் நஷ்ட ஈட்டுத் தொகையுடன் பழுது நீக்கித் தர ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

சிவகாசி, பி.கே.எஸ்.ஆறுமுகம் ரோட்டைச் சேர்ந்தவர் ஹரிகரன் மகன் ஆதித்தன். இவர் கணினி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்திற்குத் தேவையான வயர்லெஸ் உபகரணங்களை வாங்க முடிவு செய்து சென்னை அசோக்நகரில் உள்ள இன்பின் ஐ.டி. இன்போசெஸ் நிறுவனத்தை அணுகியுள்ளார். இந்த உபகரணங்களைப் பொருத்த ரூ.1,29,725 செலவாகும் என நிறுவனம் கூறியுள்ளது. இந்த பொருட்களுக்கு இரு ஆண்டுகள் உத்தரவாதத்தையும் நிறுவனம் கொடுத்துள்ளது. இதனை நம்பி ஆதித்தன் 7.7.11-ம் தேதி ரூ.1 லட்சத்தையும் பின்னர் ரூ.20 ஆயிரத்தையும் கொடுத்துள்ளார். தனது ஆட்களை அனுப்பி இன்பின் ஐடி நிறுவனம் வயர்லெஸ் கருவிகளைப் பொருத்தியுள்ளது. இவை சில நாட்களிலே பழுதாகியுள்ளது. இது குறித்து ஹரிகரன் தெரிவித்துள்ளார். ஆனால் சரியான முறையில் அவர்கள் பழுது நீக்கித் தரவில்லையாம். பின்னர் அதே நிறுவனத்தினர் ரூ.65 ஆயிரம் பெற்றுக் கொண்டு பழுது நீக்கியுள்ளார்கள். மீண்டும் கருவிகள் பழுதாகியுள்ளது. இது குறித்து பலமுறை நிறுவனத்திற்கு புகார் செய்துள்ளார்கள். ஆனால் சரியான முறையில் பழுது நீக்கித் தரவில்லையாம்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஆதித்தன் புகார் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி வ.பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் ச.சங்கர், ச.கற்பகச்செல்வி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

வயர்லெஸ் கருவிகளை, இன்பின் ஐ.டி. இன்போசெஸ் நிறுவனம் 1 மாதத்திற்குள் பழுது நீக்கித் தர வேம்டும். தவறும் பட்சத்தில் அல்லது பழுது சரி செய்ய முடியாமல் போகும் பட்சத்தில், கருவிகளை திரும்ப எடுத்துக் கொண்டு ரூ.1.20 லட்சத்தை ஆதித்தனுக்கு திருப்பித் தர வேண்டும். மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவிற்கு ரூ.3 ஆயிரமும் ஆதித்தனுக்கு வழங்க உத்தரவிடப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →