முகப்பு
தமிழ்நாடு

விவசாயி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டி திருட முயற்சி: ஒருவர் கைது

திருச்சி துவாக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்து விவசாயி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டி திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Updated On : 13 ஜூலை, 2015 at 9:14 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:28 AM

திருச்சி துவாக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்து விவசாயி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டி திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

துவாக்குடி, தேரடி தெருவை சேர்ந்தவர் தங்கமணி(48). விவசாயி. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 3 பேர், உள்ளே இருந்த பொருள்களை திருட முயன்றனர். இதையறிந்த தங்கமணியும் அவரது மகன் சங்கரும் எழுந்து கூச்சலிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், தங்கமணியையும், சங்கரையும் அரிவாளால் வெட்டினர். சப்தம் கேட்டு ஓடிவந்த தங்கமணியின் சகோதர் கணேசனையும் அரிவாளால் வெடிவிட்டு தப்பி ஓடினர். இதையறிந்த பொதுமக்கள், தப்பியோடிய 3 பேரில் ஒருவரை மட்டுமே பிடித்தனர். பின்னர் அந்த நபரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினார்கள்.

Advertisement

தகலவறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வந்த துவாக்குடி போலீஸôர்,பொதுமக்களிடமிருந்து அந்த நபரை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் தஞ்சை மாவட்டம் பிள்ளையார் பட்டியை சேர்ந்த முனியாண்டி மகன் விஜி(எ) விஜயகுமார்(33) என்பதும், தப்பி ஓடியவர்களில் ஒருவர் மானோஜி பட்டியை சேர்ந்த மூர்த்தி என்பதும் தெரியவந்தது. மேலும் ஒரு நபர் யார் என்பதை அவர் சொல்ல மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விஜயகுமாரை,போலீஸôர் திருவெறும்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.