விபத்தில் காயமுற்ற பெண்ணிற்கு ரூ.2.69 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை
ராஜபாளையத்தில் விபத்தில் காயமுற்ற பெண்ணிற்கு, காப்பீட்டு நிறுவனம் ரூ.2,69,462 இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.
தமிழ்நாடுவிபத்தில் காயமுற்ற பெண்ணிற்கு ரூ.2.69 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை
ராஜபாளையத்தில் விபத்தில் காயமுற்ற பெண்ணிற்கு, காப்பீட்டு நிறுவனம் ரூ.2,69,462 இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.
ராஜபாளையத்தில் விபத்தில் காயமுற்ற பெண்ணிற்கு, காப்பீட்டு நிறுவனம் ரூ.2,69,462 இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.
ராஜபாளையம், சத்திரப்பட்டி, இல்லத்துப்பிள்ளைமார் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி மகாலட்சுமி (23). இவர் தையல் தொழில் செய்து வந்தார். 20.12.2008-ம் தேதி தனது கணவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து தென்காசி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது புளியங்குடியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் ஓட்டி வந்த தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் காயமுற்றனர்.
மகாலட்சுமி தனக்கு இழப்பீடு கோரி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கோவிந்தராஜன், ராஜபாளையம் தி ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம், மகலட்சுமிக்கு ரூ.2,69,462 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.