முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் அருகே பைக் மோதியதில் மூதாட்டி சாவு

விருதுநகர் அருகே சாலையை கடந்து சென்ற மூதாட்டி மீது இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Updated On : 24 ஜூலை, 2015 at 8:08 PM
பகிர்:

விருதுநகர் அருகே சாலையை கடந்து சென்ற மூதாட்டி மீது இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
   
விருதுநகர் அருகே சேர்வைக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மருதன் என்பவரின் மனைவி ராமாயி(75). இவர் வியாழக்கிழமை சாலையை கடநது தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது, மத்தியசேனையில் இருந்து வடமலாபுரம் நோக்கி வேகமாக சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த மூதாட்டியை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவகாசி அரசு
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
   
இது தொடர்பாக அவரது மகன் வீரணன் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வடமலாபுரம் அண்ணாகாலனியைச் சேர்ந்த மாரீஸ்வரன்(25) என்பவரை கைது செய்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.