ஏற்காட்டில் மலர் கண்காட்சியை காண குவிந்த சுற்றுலாப் பயணிகள்
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இரண்டு நாள் மலர் கண்காட்சி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. விடுமுறை நாளான இன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அண்ணா பூங்கா, மலர்
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இரண்டு நாள் மலர் கண்காட்சி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. விடுமுறை நாளான இன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அண்ணா பூங்கா, மலர் கண்காட்சி திடலில் குவிந்தனர்.
ஏற்காட்டில் 40 வது மலர் கண்காட்சி மாவட்ட நிர்வாகம் தோட்டக் கலைதுறையின் மூலம் குறுகிய நாட்களில் மலர் கண்காட்சியை ஏற்பாடு செய்த நிலையில் மலர் கண்காட்சியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்தியா கேட், காண்டாமிருகம் கொக்கு. மற்றும் யானை உள்ளிட்டவைகள் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைந்திருந்தன. கடந்த இரண்டு நாட்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மலர் கண்காட்சி கண்டு மகிழ்ந்ததாகவும், இதனால் ரூ 3 லட்சம் அரசுக்கு வருவாய் கிடைத்ததாகவும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.