தமிழ்நாடு

மண்ணுக்கேற்ற உயிரி உரம் அசோலா

மண் வளத்தை அதிகரித்து விவசாயிகளுக்கு மகசூலை அதிகரிக்க முக்கிய உயிரி உரமாக அசோலா உள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி

மண் வளத்தை அதிகரித்து விவசாயிகளுக்கு மகசூலை அதிகரிக்க முக்கிய உயிரி உரமாக அசோலா உள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அசோலா என்பது விவசாயிகளின் நண்பன் எனக் கூறலாம். இந்த அசோலா மூலம் மண் வளத்தை அதிகரித்து அனைத்து வகைப் பயிரிலும் அதிக மகசூலைப் பெற்று விவசாயிகள் பெரும் பயனடைய முடியும்.

தற்போதைய கால கட்டத்தில் ரசாயன உரங்களால் மண்ணின் தன்மை மிகவும் மாசுபட்டு வருகிறது.

மேலும், பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் பயிர்களுக்குத் தீமை விளைவிக்கும் பூச்சிகள் அழிவதுடன் விவசாயத்துக்குத் துணை புரியும் நுண்ணுயிர்களும் அழிந்து விடுகின்றன.

இதுபோன்ற ரசாயன உரங்களால் மண் வளம் மாசுபடுவதோடு, சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.

ரசாயன உரங்கள் மூலம் விளைவிக்கும் பொருள்களை உட்கொள்ளும் மனிதனுக்கும் மறைமுகத் தீங்குகள், பக்க விளைவுகள் ஏற்படலாம்.

எனவே, விவசாயிகள் இயற்கை உரங்களாகிய தொழு உரம், உயிரி உரங்களைப் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

எனவே, விவசாயிகள் அசோஸ்பைரில்லம், பாஸ்போக்டீரியா, நீலப்பச்சை பாசி, அசோலா ஆகிய உயிரி உரங்களைப் பயன்படுத்தி தங்களது நிலங்களை செழிப்பாக வைப்பதுடன் சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் தடுக்க முடியும்.

அசோலாவின் நன்மைகள்: மண்ணில் தழைச் சத்தை நிலை நிறுத்துகிறது. பசுந்தாள் உரமாகப் பயன்படுகிறது. பயிர் உற்பத்தியை அதிகரிக்கிறது. நாற்றங்கால் விடப்பட்ட 2 அல்லது 3 நாள்களில் இரு மடங்காகப் பெருகும்.

அசோலாவின் உற்பத்திப் பெருக்கமும் சுலபம். அசோலா புரதச் சத்து நிறைந்தது. ஆகையால் மீன், கோழி போன்றவற்றுக்கு தீவனமாகவும் பயன்படும்.

நீர்நிலைகளில் படர்ந்து வளரும் தன்மை உடையதால் களைகள், கொசுக்களைக் கட்டுப் படுத்துகிறது.

எனவே, விவசாயிகள் தங்களது மண் வளத்தைப் பாதுகாக்க அசோலா உயிரி உரத்தைப் பயன்படுத்தலாம் என வேளாண் துறையினர் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜ்நாத் சிங்குடன் நெதா்லாந்து வெளியுறவு அமைச்சா் சந்திப்பு

கிராம உதவியாளா் பணிக்கான நோ்காணல், தோ்வு தொடக்கம்

திமுக ஆட்சியில் மகளிருக்கு அதிகமான திட்டங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT