முகப்பு
தமிழ்நாடு

அவசரமாக புதுதில்லி புறப்பட்டார் சிதம்பரம்

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப சிதம்பரம் திடீரென்று தில்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

Updated On : 3 நவம்பர், 2015 at 7:47 PM
பகிர்:

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப சிதம்பரம்  இன்று மாலை திடீரென்று தில்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நீக்க வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர்கள் சிதம்பரம், தங்கபாலு உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து முறையிட்டனர்.

இளங்கோவன் பிற காங்கிரஸ் தலைவர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவதில்லை. இது தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சியை பாதிக்கிறது என்று அவர்கள் சோனியா காந்தியிடம் குற்றம் சாட்டியிருந்தனர்.

Advertisement

இந்நிலையில் புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு சிதம்பரம் மீண்டும் புதுதில்லி புறப்பட்டு சென்றார்.

விமான நிலையத்தில், இளங்கோவனை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் சிதம்பரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.