விருதுநகர் அருகே போலி டாக்டர் கைது
விருதுநகர் அருகே போலி டாக்டர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடுவிருதுநகர் அருகே போலி டாக்டர் கைது
விருதுநகர் அருகே போலி டாக்டர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே போலி டாக்டர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலம் துணை இயக்குநர் முத்துவீரலட்சுமி, விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர்.நகர் பகுதியில் திங்கள்கிழமை டெங்கு தடுப்பு மற்றும் போலி மருத்துவர்கள் பற்றிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்.
அப்போது, ஆர்.ஆர்.நகர் கன்னிச்சேரி சாலையில் ஜிப்ரியல்கான் (46) என்பவர் பி.பார்ம் படித்துவிட்டு, பொதுமக்களுக்கு ஊசி போட்டும், அலோபதி மருந்து, மாத்திரைகள் வழங்கியும் வைத்தியம் பார்த்து வருவது தெரியவந்தது.
இதுகுறித்து, வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் துணை இயக்குநர் முத்துவீரலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து போலி மருத்துவர் ஜிப்ரியல்கானை கைதுசெய்தனர்.