முகப்பு
தமிழ்நாடு

திருநெல்வேலி கருப்பாநதி அணை நிரம்பியது: உபரி நீர் ஆற்றில் திறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் பருவ மழைக்கு முதலாவதாக 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை வெள்ளிக்கிழமை நிரம்பியது. இதையடுத்து அணைக்கு வந்து கொண்டிருந்த 134 கனஅடி உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:29 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் பருவ மழைக்கு முதலாவதாக 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை வெள்ளிக்கிழமை நிரம்பியது. இதையடுத்து அணைக்கு வந்து கொண்டிருந்த 134 கனஅடி உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வந்த தொடர் மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வந்தது. இதனிடையே 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை வெள்ளிக்கிழமை (நவ. 6) முழுக் கொள்ளளவை எட்டியது.

நிகழாண்டில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கி பெய்து வரும் நிலையில்  திருநெல்வேலி மாவட்டத்தில் முதலாவதாக கருப்பாநதி அணை நிரம்பியது. அணை நிரம்பியதை அடுத்து அணைக்கு வந்து கொண்டிருந்த 134 கனஅடி உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →