முகப்பு
தமிழ்நாடு

சோளிங்கர்: பிளஸ்2 படித்து விட்டு கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது

பிளஸ் 2 படித்து விட்டு சோளிங்கரில் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:29 AM
பகிர்:

பிளஸ் 2 படித்து விட்டு சோளிங்கரில் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

சோளிங்கரில் போலி டாக்டர்கள் கிளினிக் வைத்து சிகிச்சை அளிப்பதாக வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணைஇயக்குனர் மணிமேகலைக்கு தகவல் கிடைத்து. அதன்பேரில் இணைஇயக்குனர் மணிமேகலை, சோளிங்கர்  அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாரதி ஆகியோர் சோளிங்கர் பஜாரில் உள்ள ஒரு கிளினிக்கில் சோதனை நடத்தினர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த குமார்(44) என்பவர் பிளஸ்2 படித்து விட்டு நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது.

இதையடுத்து அங்கிருந்த மருந்து மாத்திரைகள் ஊசிகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து இணை இயக்குனர் மருத்துவர் மணிமேகலை சோளிங்கர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் வழக்கு பதிந்து போலி டாக்டர் குமாரை கைது செய்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →