முகப்பு
தமிழ்நாடு

கடலூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஸ்டாலின் ஆறுதல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரியகாட்டுபாளையம் மக்களைச் சந்தித்து திமுக பொருளாளர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:31 AM
பகிர்:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரியகாட்டுபாளையம் மக்களைச் சந்தித்து திமுக பொருளாளர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

கடந்த திங்கள் கிழமை பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட காற்றாற்று வெள்ளத்தால் பெரியகாட்டுபாளையம் காலணியைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அங்குள்ள பள்ளியில் தங்கப்பட்டுள்ளனர். பாதிப்பட்டு முகாமில் தங்கியுள்ளோர்களை திமுக பொருளாளர் ஸ்டாலின் நேரில் சந்திந்து ஆறுதல் கூறினார்.

அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும். திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தது போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கப்படவேண்டும்.

பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களைக் கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,. ஏரி, குளம், கால்வாய், வாய்க்கால்களைத் தூர்வாரப்படாததாலும், அரசு முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததாலும் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கின்றன. இவருடன் முன்னாள் அமைச்சர் பன்னீர் செல்வம், பொன்முடி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

காங்கிரஸ் எஸ்.சி. பிரிவின் மாநில தலைவர் செந்தமிழ் தலைவன், ஆலோசகர் வழக்குரைஞர் விஜயன் மற்றும் நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.

முழு கட்டுரையைப் படிக்க →