முகப்பு
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் 7 கிலோ தங்கம் பறிமுதல்

கொச்சியிலிருந்து இன்று காலை சென்னை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 2.25 கோடி மதிப்பிலான 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டடது.

Updated On : 15 நவம்பர், 2015 at 3:26 PM
பகிர்:

கொச்சியிலிருந்து இன்று காலை சென்னை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 2.25 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டடது.

வருவாய் புலனாய்வு (டி.ஆர்.ஐ) இயக்குநரக அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடைப்படையில், அவர்கள் கொச்சியிலிருந்து இன்று சென்னை வந்த பயணிகளிடம் சோதனை நடத்தினர்.

அப்போது நடத்திய சோதனையில், மூன்று பயணிகள் வைத்திருந்த பையிலிருந்து ரூ. 2.25 கோடி மதிப்பிலான 7 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

இதனிடையே சென்னை வழியே துபை செல்லவிருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விக்டர் என்ற பயணிடமிருந்து நேற்று இரவு, அதி நவீன ஸ்டாலைட் போன் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அவர் மாநகர காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.