முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் காட்டாற்று வெள்ளம்: 150 ஆடுகள், பொறியியல் மாணவர் சாவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில்...

தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் காட்டாற்று வெள்ளம்: 150 ஆடுகள், பொறியியல் மாணவர் சாவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில்...

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:35 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் 150 ஆடுகள் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தன. மேலும் நீர் சுழற்சியில் சிக்கியதில் பொறியியல் மாணவர் ஒருவரும் உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் புதன்கிழமை இரவில் இருந்து தொடர் மழை பெய்தது. இதனால் வியாழக்கிழமை மேற்குத் தொடர்ச்சி மலை செண்பகத்தோப்பு பகுதியில் திடீர் காட்டாற்று வெள்ளம் வந்தது.

பாப்புராஜா என்பவரின் தென்னந்தோப்பில் ந.கொம்பன், மு.வெள்ளைச்சாமி, பெ.வெள்ளைச்சாமி, பெ.கோவிந்தன், மா.குருசாமி ஆகியோர் ஆடு கிடை போட்டிருந்தார்கள். இதில் சுமார் 500 ஆடுகள் இருந்துள்ளன. திடீரென வெள்ளம் வந்தததில் 120 முதல் 150 ஆடுகள் வரை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

மேலும் வியாழக்கிழமை மதியம் மம்சாபுரம், மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் சதீஷ்குமார் (20) என்பவர் பேமலையான் தடுப்பணையில் தனது நண்பர்கள் மூவருடன் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட நீர் சுழற்சியில் சிக்கி சதீஷ்குமார் உயிரிழந்தார். இவர் கோயமுத்தூர் பார்க் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் முதன்மைச் செயலாளர் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை எஸ்.கிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்படவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

முழு கட்டுரையைப் படிக்க →