கடலூரில் கண்டெய்னர் லாரி மோதி காவலர் சாவு
கடலூர் அருகே கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் காவலர் பரிதாபமாக உயிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அருகே கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் காவலர் பரிதாபமாக உயிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் செம்மன்தளத்தை சேர்ந்தவர் தங்கதுரை (43). இவர் பண்ருட்டி அடுத்துள்ள புதுப்பேட்டை காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகின்றார். செவ்வாய்கிழமை இரவு 11
மணியளவில் அன்புசெட்டி பாளையம் அருகேயுள்ள பாலிடெக்னிக் ரோந்து பணியில் இருந்த போது அவ்வழியே பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் பணியில் இருந்த காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.